இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை அவசியம்: திலக்கரத்ன தில்ஷான்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் நேற்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி முடிவின் பின்னர் தில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமது அணியினர் எவ்வளவோ அர்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டும், திட்டமிட்டும் மைதானத்திற்குள் நுழைந்த போதும் போட்டியில் பங்கு பெற்றும் போது மிகவும் உளவியல் ரீதியில் பின்னடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலமை தொடர்ந்து நீடித்தால் அணியிலுள்ள வீரர்களது உளவியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
elutamila
No comments:
Post a Comment